Latest Post

விஜய் விலகிய அதே பகலவனில் ஜெயம் ரவி... சீமான் இயக்குகிறார்!

விஜய் நடிப்பதாக இருந்து திடீரென வெளியேறிய அதே பகலவன் படத்தில் இப்போது நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர் ஜெயம் ரவி.

கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடிப்பதாக இருந்த படம் பகலவன். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இயக்க இருந்த படம் இது.

இப் படத்திற்கான ஸ்க்ரிப்ட் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதுதான் சீமான் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்தபடியே படத்தின் திரைக்கதையை முழுமையாக முடித்துவிட்ட சீமான், வெளியில் வந்ததும் தனி அலுவலகம் எல்லாம் அமைத்து, அனைத்து படப்பிடிப்புக்கு தயாரான நிலையில், விஜய் விலகிவிட்டார்.

now jayam ravi joins with seeman pagalavan

அதன் பிறகு சீமான் இந்தப் படம் குறித்து யாரிடமும் பேசுவதைத் தவிர்த்து, கட்சிப் பணிகளில் மும்முரமானார்.

ஜீவா நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு முறை சீமான் கூறினார். ஜீவாவும் கதையைக் கேட்டார். ஆனால் பின்னர் நடிப்பதாகச் சொல்லிவிட்டார்.

இப்போது படத்தின் கதையைக் கேள்விப்பட்ட ஜெயம் ரவி, இந்தக் கதையில் நான் நடிக்கிறேன். முழுக் கதையையும் கூறுங்கள் என்று சீமானிடம் கேட்டிருக்கிறார்.

கோவையில் வைத்து 3 மணிநேரம் கதையைக் கேட்டுள்ளார். கதை சொல்லும் கலையில் சீமான் ஒரு நிபுணர். கிட்டத்தட்ட சினிமாவை நேரில் பார்ப்பது போலவே அவர் சொல்வார். நிச்சயம் நானே நடிக்கிறேன். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் 2 படங்கள் முடிந்ததும் அடுத்து ஷூட்டிங்கை ஆரம்பித்துவிடலாம் என்றாராம்.

சீமான் - ஜெயம் ரவி இணையும் 'பகலவன்' படத்தினைத் தயாரிக்கப் போவது கலைப்புலி தாணு தான். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

'பூலோகம்', 'நிமிர்ந்து நில்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் நடித்துவிட்டுத்தான் அண்ணன் ராஜா இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனப் படத்தை நடிக்கப் போகிறாராம்.

பூலோகமும், நிமிர்ந்து நில்லும் கிட்டத்தட்ட படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பீட்சா இயக்குநரின் கதாநாயகியாகும் லட்சுமி மேனன்

Karthik Subbaraj Gets Super Hit Heroine For His Next

பீட்சா என்ற திரில்லர் திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த படத்தினை மதுரை நகரை களமாக்கி படமாக்கப் போகிறாராம்.

ஹீரோ சித்தார்த் என முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில் கதாநாயகி தேடுதல் வேட்டையில் இயக்குநர் மனதில் கிளிக் ஆனது லட்சுமி மேனன் என்கின்றனர்.

கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி பெற்றவர் லட்சுமி மேனன். சுந்தபாண்டியன், கும்கி ஆகிய இரண்டு படங்களுமே நூறு நாட்கள் ஓடியவை. திரைக்கு வரப்போகும் குட்டிப்புலி படமும் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான்.

எனவேதான் மதுரை சப்ஜெக்ட் என்ற உடன் லட்சுமி மேனனை தேர்வு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இது பற்றி கருத்து கூறியுள்ள லட்சுமி மேனன், கார்த்திக் சுப்புராஜ் கதை சொல்லும் விதம் ‘சம்திங் ஸ்பெசல்' என்று கூறியுள்ளார்.

 

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்.. வீணா மாலிக்குக்கும் அதிர்ச்சியாம்!

Self Proclaimed Whistleblower Veena Mallik Turns Heat

ஜென்டில் மேன் ஆட்டம் என்று கூறப்படும் கிரிக்கெட்டில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது இது ஜென்டில்மேன் விளையாட்டா என்று சந்தேகமளிக்கிறது என்று கவர்ச்சிப் புயல் வீணா மாலிக் கூறியுள்ளார்.

பாலிவுட் நாயகி வீணா மாலிக், சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய முகம்மது ஆசிப் உடன் காதலில் இருந்தவர். சூதாட்ட புகாரில் சிக்கிய போது ஆதரங்களுடன் வெளியிடத் தயார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இப்போது ஐ.பி.எல் 6 போட்டியில் சூதாட்ட சர்ச்சை கிளம்பியதை அடுத்து இது பற்றி கருத்து கூறியுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் பற்றி செய்தியாளர்களிடம் வீணா மாலிக் கூறியதாவது,

வெளிநாடுகளில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் சட்டப்படி தவறு. பணத்திற்காக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்திய மீடியாக்களில் நுழைந்த வீணா மாலிக் பின்னர் பரபரப்பாக எதையாவது செய்து பிரபலமடைந்தார். 2010ம் ஆண்டு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப் சூதாட்ட புகார் சர்ச்சையில் சிக்கிய போது அந்த நேரத்தில் ஆசிப் உடன் இருந்தவர் வீணா மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா-ஜெயலலிதாவுக்கு பிலிம்சேம்பர் அழைப்பு

Film Chamber Invites Cm Jaya

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு முதலவ்வர் ஜெயலலிதாவுக்கு பிலிம்சேம்பர் நேரில் அழைப்பு விடுத்தது.

இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையடுத்து, தென்னிந்திய வர்த்தக சபை சார்பாக சென்னையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

இவ்விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண் தலைமையில் சங்க நிர்வாகிகள் நடிகர் சிவகுமார், ரவி கோட்டகரா, பொன் தேவராஜன், எடிட்டர் மோகன், கே.எஸ்.ஸ்ரீனிவாசன், கே.பிரசாத் ஆகியோர் சென்னை, தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து, இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

விழாவில் கலந்து கொள்ள முயற்சிப்பதாக முதல்வர் கூறியதாக பிலிம்சேம்பர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

கும்கியை தொடர்ந்து சுனாமியை களமாக்கும் பிரபு சாலமன்

Prabhu Solomon S Stunning Tsunami

காடு, மலை, யானை என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் இயக்குநர் பிரபு சாலமனின் அடுத்த படத்தின் கதை சுனாமியை மையப்படுத்தியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ங

கதையை மட்டுமே நம்பும் பிரபு சாலமன் மிகப்பெரிய கதாநாயகர்களை தேடாமல் புதுமுகங்களை அறிமுகம் செய்வார். அதேபோல் புதிய படத்தில் நான் ஈ படத்தின் மூலம் பிரபலமான ‘நானி' தான் ஹீரோ என்கின்றனர்.

கும்கி படத்தில் யானையை மையப்படுத்தி கதை இருந்தது. அதேபோல் புதிய படத்தில் 40 நிமிடத்திற்கு சுனாமியை மையமாக வைத்து பிரம்மாண்டப்படுத்த திட்டமிட்டுள்ளாராம்.

இதற்கேற்ப திரைக்கதை அமைத்துள்ள பிரபு சாலமன், ஹாலிவுட் திரைத்துறையைச் சேர்ந்தவர்களையும் தனது குழுவில் சேர்த்துக் கொண்டுள்ளாராம். சுனாமிக்கு பிந்தைய வாழ்க்கைச் சூழலும் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஐபிஎல் சூதாட்டம்... சிக்கும் 6 முன்னணி தமிழ் நடிகைகள்!

Top Actresses Ipl Spot Fixing

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பிரபல தமிழ் நடிகைகளுக்கும் தொடர்புள்ளதாக போலீஸ் சந்தேகிக்கிறது. எனவே அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதால், சம்பந்தப்பட்ட நடிகைகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது புகார்களும் சதிகளும் சூதாட்ட மோசடிகளும் அம்பலமாகி வருகின்றன.

சென்னையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தி கிரிக்கெட் சூதாட்ட தரகர்கள் 7 பேரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகிறார்கள்.

அடுத்த கட்டமாக சி.பி. சி.ஐ.டி. போலீசாரின் பார்வை நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் தொடர்பு உள்ள நடிகைகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும் துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நிருபர்களிடம் கூறும்போது, "நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சிலருடன் சூதாட்ட தரகர்களுக்கு தொடர்பு இருப்பதாக படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது. அதுபற்றி விசாரணை நடத்தப்படும்," என்றார்.

கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று போட்டிகளை பார்த்து ரசித்த நடிகைகள், கிரிக்கெட் வீரர்களுக்கு அளித்த விருந்தில் பங்கேற்ற நடிகைகள், கிரிக்கெட் வீரர்களுடன் சுற்றிய நடிகைகள் யார் யார் என்று போலீசார் விசாரித்து ஒரு லிஸ்ட் தயாரித்துள்ளார்கள்.

இதில் சில முன்னணி தமிழ் நடிகைகள் இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றுக்கும் விளம்பர தூதுவர்களாக நடிகைகள்தான் நியமிக்கப்பட்டனர். கிரிக்கெட் போட்டியை காண மைதானத்துக்கு வந்து விசில் போட்ட சில நடிகைகள் கட்டணமாக ரூ.2 லட்சம் வரை வாங்கியுள்ளனர். அவர்களுக்கும் சூதாட்ட தரகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமாக உள்ள 6 நடிகைகள் இந்த விசாரணை வளையத்தில் வருகின்றனர். விரைவில் அவர்களிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர்.

 

கேவி ஆனந்த் டார்கெட் வச்சது ரஜினிக்கு.. வாய்ப்பு வந்ததோ தனுஷை இயக்குவதற்கு!

ரஜினியை இயக்குவார், ஆர்யாவை இயக்குவார், மீண்டும் சூர்யாவுடன் கைகோர்ப்பார் என்றெல்லாம் பேசப்பட்ட கேவி ஆனந்த் அடுத்து இயக்கப் போவது தனுஷை!

'கோச்சடையானு'க்குப் பிறகு ரஜினி நடிக்கும் ஆக்ஷன் படத்தை கே வி ஆனந்த் இயக்குவார் என்றும், ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டார்கள் என்றும் பேசி வந்தனர்.

ஆனால் இதுகுறித்து ரஜினி எதுவும் சொல்லவில்லை. இதற்கிடையில் ஏஜிஎஸ் நிறுவனமே, இந்த ஆண்டு மிகப் பெரிய படம் ஒன்றைத் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. இது ரஜினி படமாகத்தான் இருக்கும் என்று கூறப்பட்டது.

kv anand direct dhanush
ஆனால் இப்போது கே.வி.ஆனந்த், அடுத்ததாக தனுஷ் நடிக்க இருக்கும் படத்தினை இயக்குவார் என்றும் அதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வழக்கமாக கே.வி. ஆனந்த் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பார். ஆனால் இந்தப் படத்தில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

தனுஷின் மரியான், ராஞ்ஜ்ஹனா படங்களுக்குப் பிறகு இந்தப் புதிய படம் தொடங்கும் என்று தெரிகிறது.

 

விளம்பரத்தை தொடர்ந்து மலையாள படத்தில் இருந்தும் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்

திருவனந்தபுரம்: ஸ்பாட் ஃபிக்சிங் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சிறை சென்றதால் ஸ்ரீசாந்த்தின் விளம்பர வாய்ப்பைத் தொடர்ந்து சினிமா வாழ்க்கைக்கும் முற்றுப் புள்ளி விழுந்துள்ளது. மலையாள சினிமாவில் ஸ்ரீசாந்த் கவுரவ வேடத்தில் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள கவிஞரும் இசையமைப்பாளருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி இயக்கத்தில் உருவாகும் 'மழவில்லினட்டம் வரே' (வானவில்லின் நுனி வரை) என்ற மலையாள திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

portion malayalam film acted sreesanth to be removed

பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவுக்கு வரும்போது அவரது வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை சுற்றித்தான் படத்தின் கதைக் களம் அமைந்துள்ளது. இதில் இந்திய அணியின் வீரர்களில் ஒருவராக கவுரவ வேடத்தில் ஸ்ரீசாந்த் நடித்திருந்தார். சூதாட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஸ்ரீசாந்த் இந்தியாவின் சிறந்த வேகப் பந்து வீச்சாளர். அவர் எனது நல்ல நண்பர்களுள் ஒருவர். எனவே, எனது படத்தில் அவரை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தேன். தற்போது, வரும் செய்திகளை கருத்தில் கொண்டு அவர் நடித்த காட்சிகளை நீக்கி விட்டோம்.

இந்த படத்தில் லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் அப்பாஸ் ஹசன் கதாநாயகனாகவும், அர்ச்சனா கவி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.

கேரள அரசின் லாட்டரி விளம்பரத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஸ்ரீசாந்த் இப்போது சினிமாவில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் சிறை சென்றதோடு சினிமா, விளம்பர வாய்ப்பையும் இழந்து தவிக்கிறார் ஸ்ரீசாந்த்.

 

இந்தியில் முதல் முறையாகப் பாடிய ரஜினி!

Rajini Sings Hindi Kochadaiyaan

சூப்பர் ஸ்டார் ரஜினி தன் கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடினார் என்பது ரொம்ப பழைய செய்தி.

இதோ... ஒரு புதிய செய்தி. கோச்சடையானின் இந்திப் பதிப்புக்காக தன் சொந்தக் குரலில் ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடினார் ரஜினி. இந்தப் பாடலை இர்ஷத் கமில் என்பவர் எழுத, நேற்று பதிவு செய்தார் ரஹ்மான்.

பொதுவாக தான் எந்த மொழியில் நடித்தாலும் தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதுதான் ரஜினி வழக்கம். அவருக்கு இந்தி மிக நன்றாகத் தெரியும். இதுவரை அவரது அனைத்து இந்திப் படங்களிலும் அவரே பேசியுள்ளார்.

ஆனால் இந்தியில் பாடுவது இதுதான் முதல் முறை. தமிழில் மன்னன் படத்தில் இளையராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருந்த ரஜினி, இப்போது கோச்சடையானுக்காக ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.

கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்போது இரண்டாவது பகுதிக்கான டப்பிங் நடக்கிறது.

ஜூன் முதல் வாரத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று தெரிகிறது.

 

ஜில்லா படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய மோகன் லால்!

Mohan Lal Celebrates His Birthday Jilla Shooting

மலையாளத்தின் முன்னணி நடிகரான மோகன்லால் தனது 53வது பிறந்த நாளை விஜய்யின் ஜில்லா படப்பிடிப்பில் கொண்டாடினார்.

மலையாளத்தில் கடந்த 33 ஆண்டுகளாக முதலிடத்தில் இருப்பவர்கள் மோகன்லாலும் மம்முட்டியும்.

மஞ்ஜில் விரிஞ்ச பூக்களில் பூர்ணிமாவுடன் ஜோடியாக நடித்தவர், 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஜில்லா படத்தில் அதே பூர்ணிமாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

மோகன்லால் மலையாளியாக இருந்தாலும், அவர் குடியிருப்பது பெரும்பாலும் சென்னையில்தான். அவரது மகன் படித்ததும் சென்னையில்தான்.

தமிழில் இருவர், பாப்கார்ன், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நேசன் இயக்கும் ஜில்லா படப்பிடிப்பு இப்போது சாலக்குடியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்ற மோகன்லால் தனது பிறந்த நாளை ‘கேக்' வெட்டி கொண்டாடினார். அவருக்கு பூர்ணிமா பாக்யராஜ், இயக்குநர் நேசன் உள்ளிட்ட படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.